இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்துவரும் சூழலில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வரக்கூடிய பயணிகள், மூன்று அடுக்கு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மேலும், பயணிகளுக்கு உடல் மற்றும் அடையாள சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையம் வருமாறு ஏர் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.