பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா மேலும் ஒரு பதக்கம் வென்றது. ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் சிறப்பாக விளையாடியுள்ளார். தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் 451.4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.