மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு கிராமம் துக்கம் அனுசரித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்மோகன் சிங் 4-ம் வகுப்பு வரை படித்த கா கிராமம் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறியதாவது, "கிராமத்தில் உள்ள அனைவரும் மிகுந்த வேதனை அடைகிறோம். மன்மோகன் சிங் இறுதிச் சடங்கில் பங்கேற்க விருப்பம் உள்ளது. ஆனால் நடப்பதற்கு சாத்தியம் இல்லை. ஆகையால், அஞ்சலி செலுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.