இந்திய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், பாகிஸ்தானில் உள்ள பிரதான ஊடகங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், முதலில் 9 பயங்கரவாத தளங்களை தாக்கி அழித்தது. தொடர்ந்து பாக்., ராணுவ நிலைகளையும், கட்டமைப்பையும் இந்தியா தகர்த்து வருகிறது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத பாக்., இந்தியாவை கடுமையாக தாக்கி அழிப்பதாகவும், விமான நிலையங்கள் முடக்கப்பட்டதாகவும் போலி செய்தியை பரப்பி வருகிறது.