பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப். 11-ந் தேதி தொடங்கி ராவல்பிண்டி, கராச்சி, முல்தான், லாகூர் ஆகிய 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது. மே 18ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிலவுவதால் PSL தொடரின் எஞ்சியுள்ள எட்டு ஆட்டங்கள் UAE-க்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.