இந்தியா உடனான சண்டையை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவுடனான சண்டையில் பலத்த அடி வாங்கும் பாகிஸ்தான் அதில் இருந்து மீண்டு வர அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உதவ வேண்டும் என கோரியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. போரை நிறுத்த உலக நாடுகள் உதவுவதோடு தங்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது.