IMF (சர்வதேச நாணய நிதியம்) நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்று இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் நிதியுதவி, அரசு ஆதரவு பெற்ற எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தப்படுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருப்பதாக இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. IMF-ன் உறுப்பினரான இந்தியா, இவ்விவகாரத்தில் கடும் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், கடன் வழங்குதலுக்கான வாக்கெடுப்பையும் புறக்கணித்துள்ளது.