மதமோதலை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது என வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அவர், "காஷ்மீர் பூஞ்ச்சில் உள்ள குருத்வாராவை தாக்கியது பாகிஸ்தான் படைகள்தான். இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது. உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் தவறான தகவல்களை கொடுத்து திசை திருப்ப முயற்சிக்கிறது" என காட்டமாக கூறியுள்ளார்.