நாம் நினைத்தால் பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இல்லாமல் ஆக்க முடியும் என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "பாகிஸ்தான் கூட சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. தீவிரவாத தாக்குதலை வேரோடு அறுத்து எறிய வேண்டும். அதற்காகத்தான் இந்த போரை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே, ஒற்றுமையாக ஒரு தாய் பிள்ளையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்" என்று பேட்டியளித்துள்ளார்.