முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தும் நிலையில் அது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியுடான ஆலோசனைக்கு பிறகு தளபதிகளுடன் அவர் பேசினார். இதன்போது இந்தியா உடனான சண்டையை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது பற்றி பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.