காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியானது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகள் முகாம்களை தாக்கி அழித்தனர். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 16 இந்தியர்கள் பலியான நிலையில், பல வீடுகள் இடிந்து சேதமாகின.