பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு முதல் விடிய விடிய நடத்திய தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இந்நிலையில், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆங்காங்கே ஏவுகணை மற்றும் டிரோன்களின் பாகங்கள் மற்றும் உலோகப் பாகங்கள் சிதறி கிடக்கின்றன. மேலும், குர்தாஸ்பூரில் உள்ள சிச்ரா கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் பெரிய பள்ளம் ஒன்று திடீரென ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.