தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெறும் வடமாநிலத்தவர் குழந்தைகளுக்கு உதவித்தொகை மற்றும் பரிசுகள் அளிக்க வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.