சில வீடுகளில் எறும்புகளின் தொல்லை மிகப் பெரியளவில் இருக்கும். சிவப்பு எறும்புகள், கட்டெறும்புகள் போன்றவை மனிதர்களை கடிக்கவும் செய்யும். ஆரஞ்சு பழத்தோலை கொண்டு எறும்புகளை விரட்டி அடிக்கலாம். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஆரஞ்சு தோலை போட்டு அரைத்து பேஸ்ட் செய்து எறும்புகள் நுழையும் இடத்தில் தடவினால் எறும்புகள் அதைத்தாண்டி உள்ளே வராது. ஆரஞ்சு தோல் ஒரு இயற்கையான எறும்பு கொல்லியாக செயல்படுகிறது.