ஆல்கஹாலுக்கு இரட்டை வரி விதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு

59220பார்த்தது
ஆல்கஹாலுக்கு இரட்டை வரி விதிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு
மது தயாரிக்க பயன்படுத்தப்படும் தூய்மையான ஆல்கஹாலுக்கு இரட்டை வரி விதிக்கும் முடிவுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் கலந்துகொண்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, உயர் தூய்மை ஆல்கஹால் மீது இரட்டை வரி விதிப்பதில் நிர்வாக நடைமுறை சிக்கல் உள்ளது. உயர் தூய்மை ஆல்கஹாலை அதிகம் இறக்குமதி செய்யும் மாநிலமான தமிழகத்திற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். சிறுதானிய பொருள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் பரிந்துரைகளை தமிழகம் ஏற்றுக் கொள்கிறது என தெரிவித்திருக்கிறார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி