இந்திய ராணுவம், கடந்த மே 7ஆம் தேதி நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில், பாகிஸ்தானைச் சேர்ந்த 5 முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள், முடாஸ்ஸர் கடியான் காஸ், ஹாஃபிஸ் முகமது ஜமீல் (ஜெய்ஷ்-இ-முகமது), முகமது யூசுப் அசார் (ஜெய்ஷ்-இ-முகமது), காலித் (எ) அபு ஆகாஷா (லஷ்கர்-இ-தொய்பா), முகமது ஹசன் கான் (ஜெய்ஷ்-இ-முகமது) ஆகியோர் என கூறப்படுகிறது. இதில் முடாஸ்ஸர் கடியான் காஸ் என்ற பயங்கரவாதியின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.