திண்டுக்கல்லில் தை மாத பெளர்ணமியை முன்னிட்டு, திரளான பக்தர்கள் வியாழக்கிழமை கிரிவலம் சென்றனர்.
திண்டுக்கல் மலையைச் சுற்றி ஒவ்வொரு பெளர்ணமி நாளிலும் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன்படி, தை மாத பெளர்ணமியையை முன்னிட்டு, திண்டுக்கல் மலைக் கோட்டை ஸ்ரீ அபிராமி அம்மன் ஸ்ரீ பத்மகிரீஸ்வரர் ஆலய பாதுகாப்புப் பேரவை, இந்து முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பிலும், பக்தர்கள் தரப்பிலும் ஏராளமானோர் கிரிவலம் சென்றனர். 3 கி.மீ. கிரிவலப் பாதையில் அமைந்துள்ள 8 சிவன் கோவில்கள் உள்பட 22 கோவில்களிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.