கேரளா: காசர்கோடு செங்களா பகுதியை சேர்ந்தவர் உஸ்மான் (63). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை ஆட்டோவில் ஏற்றி ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்று பலாத்காரம் செய்தார். இதனால், காசர்கோடு மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் உஸ்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம், உஸ்மானுக்கு 167 வருடம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.