தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 90 வயது மூதாட்டி ஒருவர், நடுரோட்டில் கட்டிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தன்னை, தனியே தவிக்க விட்டுச் சென்ற பிள்ளைகளிடம் சேர்த்து வைக்க கோரி இந்த தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, இதுகுறித்து போலீசில் புகார் அளித்த நிலையில் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இந்த மூதாட்டியை பராமரித்து வந்துள்ளார்.