கேரளாவின் மலப்புரத்தில் நிபா வைரஸ் நோயாளியுடன் தொடர்பில் இருந்த 6 பேருக்கும் சோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட நோயாளி கவலைக்கிடமாக உள்ளார். பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அமலில் இருக்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லேசான அறிகுறிகளுடன் 5 பேர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்வோர் விழிப்புடன் இருப்பது அவசியம்.