நீலகிரி: காட்டுயானையால் பொதுமக்கள் வியப்பு

244பார்த்தது
நீலகிரி எமரால்ட் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டுயானை பொதுமக்கள் வியப்பு அடைந்தனர். அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு கடந்த 6ம் தேதி மாலை 5:00 மணியளவில் யானை ஒன்று நுழைய முயன்றது. காட்சி முனைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. நீலகிரி வனக்கோட்ட வனத்துறை அலுவலர் கவுதம் தலைமையில், ரேஞ்சர்கள், வனக்காவலர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள், முதுமலையில் இருந்து யானைகளை விரட்டும் கும்கி ஊழியர்கள் என 40 பேர் கொண்ட குழு யானையை விரட்டியது. யானை கடந்த மூன்று நாட்களாக கேத்தி ரயில் நிலையம், குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்தது. இந்த நிலையில் தீட்டுக்கல் பகுதியில் சுற்றித் திரிந்த இந்த யானை தற்போது எமரால்ட் பகுதியில் உள்ள குடியிருப்பு, தேயிலைத் தோட்டம், சாலை என அனைத்து பகுதிகளிலும் சுற்றி வருகிறது. உதகை எமரால்ட் லாரன்ஸ் பகுதியில் சுற்றித் திரிந்த யானையை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி