நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இந்த மலை மாவட்டத்தில் பல்வேறு வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.
கோடை காலங்களில் சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல ரகங்களில் பலவண்ண மலர்கள் கண்காட்சிக்காக காட்சிப்படுத்தப்படும். அதன் பிறகு அந்த செடிகளில் பல்வேறு கால நிலைகளை ஏற்ப பூக்கள் பூக்கத்துவங்கும்.
அந்த வகையில் தற்பொழுது தாவரவியல் பூங்காவில் உட்புறத்தில் சூரியகாந்தி மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இவை பூங்காவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உள்ளது. விரிந்த சூரியகாந்தி மலர்களுக்கு முன்னர் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
சூரிய ஒளி பட்டால் மட்டுமே நன்கு விரியக்கூடிய சூரியகாந்தி மலர்கள் சூரிய உதயம் சற்று குறைவாகவே தென்படும் மலை மாவட்டத்திலும் தற்பொழுது பூத்துக் குலுங்குவது அனைவரும் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூரியகாந்தி மலர்களில் அதிகமான தேன் சுவை உள்ளதால் அந்த மலர்களில் உள்ள தேனை எடுக்க தேனீக்கள் மலர்களை வட்டமிடுவதும் இதனை பொதுமக்கள் கண்டு களிப்பதும் ஒரு அலாதி இன்பமானதாக உள்ளது.