நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சியை தமிழக அரசு தலைமை கொரடா க. ராமசந்திரன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடத்தப்படுவது வழக்கம். இச்சமயங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டு தோறும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் கடந்த மூன்றாம் தேதி காய்கறி கண்காட்சியுடன் துவங்கியது.
இந்தநிலையில் உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி இன்று துவங்கியுள்ளது இந்த ரோஜா கண்காட்சியினை தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ ஆகியோர் இணைந்து ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்
2 லட்சம் ரோஜாக்களில் மலர் அலங்காரங்களாய் கடல்வாழ் உயிரினங்களின் வடிவமைப்பை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் பார்வையிட்டனர்