ஊட்டி: நுகர்வோர் கூட்டுறவு பண்டக நியாய விலை கடையில் ஆய்வு!

70பார்த்தது
நிர்வாகத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பொதுமக்களின் தேவைகளை நேரடியாக அறிந்து கொள்வதற்காக உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் எடக்காடு பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நியாய விலை கடையில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் நியாய விலை கடையில் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் மூலம் பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றவும், நியாய விலை கடைகளின் செயல்பாடு மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி