மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு சிறுத்தை, மான், கரடி போன்ற வனவிலங்குகளின் வசிப்பிடமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக வனவிலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில் உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் வாகனத்திற்கு வழி விடாமல் நடுவழியில் கம்பீரமாகச் சென்றுகொண்டிருந்த சிறுத்தையின் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.