தமிழ்நாடு அரசு சார்பில் குன்னூரில் 10 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச அளவில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட உள்ளது
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான மாபெரும் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழாவினைஉதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில்தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கா. ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள 190 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 22. 70 கோடிக் கடனும், நகர் பகுதியில் உள்ள 180 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 17. 13 கோடி என ஆக மொத்தம் 278 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 39. 83 கோடி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளின் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு தமிழ்நாடு அரசு தலைமை கொறாடா கா. ராமச்சந்திரன் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்கார ராமச்சந்திரன் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள எடப்பள்ளி பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் சர்வதேச அளவில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி மைதானம் அமைக்கப்பட உள்ளதாகவும் அதற்கான பணி விரைவில் துவங்கப்படும் என்றார். இந்த நிகழ்ச்சியில் உதகை நகர மன்ற தலைவி வாணி ஸ்ரீ, துணைத் தலைவர் ரவிக்குமார், உட்பட அரசுத் துறை அதிகாரிகள் சுய உதவி குழு பெண்கள் பங்கேற்றனர்.