நீலகிரியில் துவங்கியது காபி சீசன்

50பார்த்தது
நீலகிரியில் துவங்கியது காபி சீசன். காபி தோட்டங்களில் உள்ள காப்பி செடிகளில் பூத்துக் குலுங்கும் காப்பி மலர்கள் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தின் பிரதான விவசாய தொழிலாக தேயிலை விவசாயம் இருந்து வருகிறது. இதில் சுமார் 65,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. தேயிலை தோட்டங்களின் நடுவே ஊடுபயிராக பழ வகைகளான ஆரஞ்சு, பேரிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இதே போல் கூடலூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஊடுபயிராக காபி மற்றும் மிளகு ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது. தேயிலைக்கு நிலையான விலை கிடைக்காத சூழலில், இந்த ஊடுபயிர்கள் மூலமாக விவசாயிகள் ஓரளவிற்கு வருமானம் ஈட்டி வருகின்றனர். 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காபி பயிர்களில் பூப்பிடிக்கும் காலம் என்பதால் இந்த மழை அதற்கு மிகுந்த உறுதுணையாக இருந்து வருகிறது. தற்போது காபி தோட்டங்களில் உள்ள காப்பி செடிகளில் காபி மலர்கள் தூக்கத் துவங்கியுள்ளது. நன்கு விளைந்தவுடன், அவற்றை பறித்து, தோல் நீக்கி, வெயிலில் காய வைத்து, காபித்தூள் தயாரிக்கும் அளவிற்கு பக்குவப்படுத்தி அவை சேமித்து வைக்கப்படும். தற்போது காபி மலர்கள் பூக்கத் துவங்கியுள்ளதால் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

தொடர்புடைய செய்தி