உதகையில் செம்மொழி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது

59பார்த்தது
நீலகிரி

உதகையில் செம்மொழி நாள் கருத்தரங்கம் கூட்டுறவு துறை சார்பில் நடைபெற்றது. நாளை தும்மனட்டி கிராமத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள என். சி. எம். எஸ் மண்டபத்தில் செம்மொழி நாள் கருத்தரங்கம் இன்று கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் தலைமையில் நடைபெற்றது.

செம்மொழியான தமிழ் மொழியை கொண்டு சேர்க்கும் வகையில், கருத்தாளர்கள், துணைப் பதிவாளர்கள், ராமலிங்கா மேலாண்மை பயிற்சி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு தாய் மொழியே அனைத்து மக்களுக்கும் சிறந்தது என்றும், செம்மொழியான தமிழ் மொழியை உணர்த்தும் வகையிலும், தமிழ் மொழியின் சிறப்பை இந்த உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலும், இந்த செம்மொழி கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்தும் வகையில் நாளை தும்மனட்டி கிராமத்தில் இயங்கி வரும் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மத்தியில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய சங்கங்களின் சார்பில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் தயாளன் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி