ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட லோயர் பஜாரில் ஏராளமான வணிக நிறுவனம், குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடையுடன் இணைக்கும் வசதியாக ஏ. டி. சி. , ரவுண்டானாவிலிருந்து மத்திய பஸ் ஸ்டாண்ட் வரை மூன்று இடத்தில் கால்வாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்டது.
சாலையில், 15 அடி நீளம், 10 அடிக்கு ஆழத்தில் பணியில் ஒருபுற கால்வாய் அமைக்கும் பணி தற்போது முடிந்த நிலை மறுப்புறம் ஊட்டி லோயர் பஜார் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியை ஒட்டி வாகனங்கள் வழிபாதையாக திருப்பி விடப்பட்டது.