கோத்தகிரி பகுதிகளில் அதிக அளவில் வன விலங்குகள் கரடிகள் காட்டெருமை சிறுத்தைகள் என சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர் தொடர்ந்து உலா வரும் வனவிலங்குகளை வனத்துறையினர் முறையாக அவற்றை விரட்டவோ எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என பல இடங்களில் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அரவேணு அருகே சேலாடா பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் கரடி ஒன்று தொடர்ந்து அதே பகுதியில் உலா வருகின்றன மேலும் அங்குள்ள விநாயகரை கோவிலிலும் அடிக்கடி செல்வதால் இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் இப்பகுதியில் தொடர்ந்து கரடி உலா வருவதால். தேயிலை இலை பறிக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.