நீலகிரி மாட்டம் குன்னூரில் குடியிருப்பில் புகுந்து வளர்ப்பு நாயை வேட்டையாடி சென்ற சிறுத்தையின் Cctv. காட்சிகள் இனையத்தில் வைரல்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குறிப்பாக உணவு, மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி உலா வருவதாலும் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்வதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் அருகே உள்ள பெட்டட்டி இந்திரா நகர் குடியிருப்பில் சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயை பிடித்து கொண்டு கேட்டின் மீது தாவி செல்லும் வீடியோ அங்கு பொருத்தப் பட்டிருந்த, கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.