வைரல் வீடியோ

63பார்த்தது
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே அரவேனு பெரியார் நகரில் மூன்றாவது நாளாக உலா வரும் 2 கரடிகள்.
மலை மாவட்டம் நீலகிரி மாவட்டம் 55% வனப்பகுதி கொண்டுள்ள மாவட்டம் இங்கு யானை, புலி, கரடி, சிறுத்தை, மான் போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும்.

சமீப காலமாக வனவிலங்குகள் வனத்தை விட்டு உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு சமீப காலமாக வர தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு , பெரியார் நகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை பெரிய கரடி தொடர்ந்து ஒரே பகுதியில் உலா வந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மூன்றாவது நாளாக நேற்று இரவு 2 கரடிகள் ஒரே இடத்தில் உலா வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டுள்ள ஒருவரின் வீட்டில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

நாளுக்கு நாள் கரடிகளின் எண்ணிக்கை அப்பகுதியில் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் முன்பே கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி