குன்னூரில் அதிசயம்; ஆறு விரல்களுடன் கேரட்

83பார்த்தது
குன்னூரில் அதிசயம்; ஆறு விரல்களுடன் கேரட்
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக, குன்னூர் அருகே உள்ள காட்டேரி வில்லேஜ், கேத்தி-பாலாடா, முட்டிநாடு, கொல்லிமலை, சாந்தூர் ஆகிய பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. 

தற்போழுது கேரட் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கேத்தி-பாலாடா பகுதியில் அறுவடை செய்யப்பட்ட கேரட் அப்பகுதியில் உள்ள இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டபோது, அரை கிலோ எடையில் ஆறு விரல்கள் தோற்றத்தில் அதிசய கேரட் இருப்பதை கண்ட தொழிலாளர்கள் ஆச்சரியமடைந்தனர். தகவல் அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் அதிசய கேரட்டை பார்வையிட்டு சென்றனர். 

ஆறு விரல்கள் தோற்றத்தில் கேரட் கிடைத்த செய்தி அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் இன்று கூறுகையில், இந்த அதிசய கேரட், இயற்கையின் விந்தையாக உள்ளது. இது எங்கள் நிலத்தின் வளத்தையும், கேரட்டின் தரத்தையும் பறைசாற்றுகிறது, என்றனர்.

தொடர்புடைய செய்தி