கர்ப்பிணிகளுக்கு மனநல விழிப்புணர்வு முகாம்

71பார்த்தது
கர்ப்பிணிகளுக்கு மனநல விழிப்புணர்வு முகாம்
பந்தலூர் அருகே அம்பலமூலா ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு மனநல விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசும்போது, கர்ப்பிணிகள் மனநலமுடன் இருந்தால், கர்ப்ப காலத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்க முடியும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மனஅழுத்தம் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும் வகையில் கீரைகள், சிறுதானிய உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும என்றார். மனநல ஆலோசகர் சத்தியசீலன் பேசும்போது, கர்ப்ப காலத்தில் பெண்களின் மனநலனில் அக்கறை காட்டுவது அவசியம். கர்ப்ப காலத்தில் கோபம், பயம், பதட்டம், மனஅழுத்தம் போன்றவை கருச்சிதைவை ஏற்படுத்தும். குடும்ப சண்டையை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை அடுத்தவர்களோடு ஒப்பிட்டு பேசவது, திட்டுவது, கடிந்து கொள்ளுதல் கூடாது. மன ஆரோக்கியம் தான் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது என்றார். இதில் முதுநிலை செவிலியர் மணிமாலா, சுகாதார ஆய்வாளர் உதயபிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி