கூடலூர்: கொளுத்தும் வெயிலால் நுங்கு விற்பனை அமோகம்!

60பார்த்தது
கூடலூர்: கொளுத்தும் வெயிலால் நுங்கு விற்பனை அமோகம்!
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கோடை மழையால் சற்று தணிந்திருந்த வெப்பம், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வெயிலின் தாக்கம் காரணமாக, மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். உடல் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர், நுங்கு போன்றவற்றை மக்கள் நாடி வருகின்றனர். வெளியூர் வியாபாரிகள் சமவெளிப் பகுதிகளில் இருந்து நுங்கு மற்றும் பதநீரை கொண்டு வந்து சாலையோரங்களில் விற்பனை செய்து வருகின்றனர். மூன்று நுங்கு 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதால் விலையை உயர்த்தியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்த வெயில் தாக்கத்தால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி