கூடலூர்: சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்.. 8 பேர் கைது

64பார்த்தது
கூடலூர்: சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்.. 8 பேர் கைது
கர்நாடகாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சண்டை சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கூடலூர் போலீசார் நேற்று (டிசம்பர் 22) கைது செய்துள்ளனர். ஓவேலி பெரிய சூண்டி பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், கூடலூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையிலான குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். 

சோதனையில், கார்த்திக் என்பவரின் மாமியார் வீட்டின் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட வாசிம் (38), இர்பான் (34), சேது (38), ஜீவா (23), அகமது (27), தசரத்துல்லா (26), கார்த்திக் (30), யோகேந்திரன் (22), 8 பேர் சிக்கினர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெரியசூண்டி மற்றும் கர்நாடகா நஞ்சன்கோடு பகுதியைச் சேர்ந்தவர்கள். போலீசார் 4 சண்டை சேவல்கள் மற்றும் ரூ. 5900 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி