ஊட்டிதாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் அஜிலியா மலர்கள்

75பார்த்தது
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

உலகப் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள், மூலிகை தாவரங்கள், பெரணிகள், கள்ளிச் செடிகள் மற்றும் மரங்கள் ஆகியவை உள்ளன.

அதேபோல், பல வெளி நாடுகளில் காணப்படும் புகழ் வாய்ந்த மரங்கள், மலர் செடிகள் இங்கு வளர்க்கப்படுகிறது. இவைகள் அந்தந்த பருவங்களில் மட்டும் பூக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

இத்தாலியன் பூங்கா மற்றும் கண்ணாடி மாளிகை அருகில் பனிக்காலத்தில் பூக்கும் அஜிலியா மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. இந்த மலர்கள் எப்போதும் பனிக்காலத்தில் மட்டுமே பூக்கக் கூடியவை ஆகும் சில மாதங்கள் இந்த செடிகளில் மலர்கள் இன்றி புதர் போன்று காட்சியளிக்கும். தற்போது வெள்ளை மற்றும்  இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துள்ள அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மேலும் அஜிலியா மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாகவும், புகைப்படம் எடுக்கவும் பயன்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி