பந்தலூர் அருகே தொண்டியாளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக், 22. இவர் தற்போது குந்தலாடி பகுதியில் தங்கி உள்ளார். கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, குந் தலாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில்லறை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, நெலக்கோட்டை போலீசார் இளைஞரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்து விசாரணை நடித்து வருகின்றனர்.