127வது மலர் பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

62பார்த்தது
உதகை தாவரவியல் பூங்காவில் 127வது மலர் கண்காட்சிக்காக 7. 5 லட்சம் மலர் நாற்றுகளை நடவு செய்யும் பணி துவங்கியது. நடவு பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.


நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக பூங்கா முழுவதும் மலர் நாற்றுக்கள் நடப்படுவது வழக்கம். இந்நிலையில் வருகிற மே மாதம் நடைபெறவுள்ள 127வது மலர் கண்காட்சிக்கான நடவு செய்யும் பணி இன்று துவங்கியது. இதனை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடங்கிவைத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி