நாட்டு துப்பாக்கியுடன் 5 பேரை கைது செய்த வனத்துறையினர்

79பார்த்தது
கோத்தகிரி அருகே அத்துமீறி வனப் பகுதிக்குள் புகுந்து கற்பூர மரம் வெட்டிய வழக்கு மற்றும் ஏர்கன் எனப்படும் துப்பாக்கியால் வேட்டையாட காப்பு காட்டில் திரிந்த ஐந்து பேர் கைது வனத்துறை அதிரடி நடவடிக்கை.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு வனச்சரகத்திற்கு உட்பட்ட கர்சன் வேலி பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி வனத்துறைக்கு சொந்தமான காப்பு காட்டில் சில மர்ம நபர்கள் புகுந்து கற்பூர மரங்களை வெட்டியதாகவும் மேலும் ஏர்கன் எனப்படும் துப்பாக்கி எடுத்துச் சென்று வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின் படி கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி சந்தேகத்தின் பெயரில் ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் இதனைத் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்ட ஈளாடா பகுதியை சேர்ந்த சசிகுமார் 39 நாகராஜ் 34 கிருஷ்ணகுமார் 48 பிரகாஷ் குமார் 22 அருள்செல்வன் 30 ஆகிய ஐந்து பேரை கைது செய்து குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி