சுற்றுலா பயணிகளை கவரும் ஆர்கிட் மலர்

66பார்த்தது
சுற்றுலா பயணிகளை கவரும் ஆர்கிட் மலர்.

கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் ஆர்கிட் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டம் ஆன நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றன.

குறிப்பாக உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில்  ஓணம் மற்றும் மிலாடி நபி பண்டிகையை கொண்டாட காலை முதலே சுற்றுலா பயணிகளின் கூட்டம் கலை கட்டியது

குறிப்பாக தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது மேலும் புதுவகை மலரான ஆர்கிட் மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள்  புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

மேலும் இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு பூங்காவில் உள்ள புள் தரை மைதானத்தில் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தும்  விளையாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி