வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி செல்லும் பரபரப்பு காட்சி

58பார்த்தது
கோத்தகிரி அருகே பகல் நேரத்திலேயே குடியிருப்பு முன்பு உறங்கிய கொண்டிருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி செல்லும் பரபரப்பு காட்சி.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் குடியிருப்பு பகுதியில் புகுந்து வளர்ப்பு நாய்களை வேட்டையாடி செல்கிறது.
இந்த நிலையில் கோத்தகிரி அருகேள்ள பேர கணியிலிருக்கு கன்னேரி செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள குடியிருப்பு முன்பாக பட்ட பகலில் உறங்கி கொண்டிருந்த வளர்ப்பு நாளை சிறுத்தை வேட்டையாடி கவ்வி சென்றது. இந்த காட்சியை அங்கிருந்த வாகன ஓட்டி அச்சத்துடன் வீடியோ எடுத்துள்ளார் தற்போது அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறையினர் சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி