வங்கதேச எல்லையை ஒட்டிய மேகாலயா மாநிலத்தின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் மே.8 முதல் அடுத்த 2 மாதங்களுக்கு இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச எல்லையிலிருந்து 1 கி.மீ., தூரத்திற்குள் இருக்கும் பகுதிகளில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். எல்லை தாண்டிய ஊடுருவல், கடத்தல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக இந்த இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.