திருமணத்திற்குப் பிறகு முதல்முறையாகக் கணவரைச் சந்திக்கச் சென்ற புது மணப்பெண் அகமதாபாத் விமான விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த குஷ்பு ராஜ்புரோஹித்துவா என்ற பெண்ணுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. அவரது கணவர் மன்பூல் சிங் லண்டனில் படித்து வருகிறார். இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு முதல்முறையாகக் கணவரைச் சந்திக்க ஏர் இந்தியா AI171 விமானத்தில் பயணித்த குஷ்பு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.