கடற்பாசிகளை பயன்படுத்தி மின் கழிவுகளிலிருந்து தங்கத்தை எடுக்கும் புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆய்வில், 20 பழைய கம்ப்யூட்டர் மதர்போர்டுகளிலிருந்து கடற்பாசியை பயன்படுத்தி, 450 மில்லிகிராம் 22 கேரட் தங்கத்தை எடுத்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், மின் கழிவுகளிலிருந்து 1 டாலர் செலவில் 50 டாலர் மதிப்புள்ள தங்கத்தை மீட்டெடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.