புதிய கல்விக் கொள்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி

80பார்த்தது
புதிய கல்விக் கொள்கை.. உச்சநீதிமன்றம் அதிரடி
தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துமாறு தமிழ்நாடு, மேற்குவங்கம் மற்றும் கேரள மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு, தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறும் செயல் அல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நீங்கள் டெல்லியில் உள்ளீர்கள், உங்களுக்கு இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கற்றுக்கொள்ளுங்கள் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி