பாகிஸ்தானுடனான பதட்டங்கள் காரணமாக நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட CA இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளை மறு திட்டமிடப்பட்டதாக ICAI அறிவித்துள்ளது. இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், தேர்வு மையங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டதாக ICAI தெரிவித்துள்ளது.