தவெகவின் முதல் பொது குழுக் கூட்டத்தில் கவிஞரின் பெயரை மாற்றிக் கூறியதால் விஜய்யை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். Men may come and Men may go, But I go on forever" என்ற கவிதையோடு தன் உரையை முடித்த விஜய், இந்தக் கவிதை William Blake எழுதியதாக கூறினார். ஆனால் இக்கவிதை Alfred, Lord Tennyson என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், பாவம் அவர் என்ன பண்ணுவாரு எழுதிக் கொடுத்ததைத்தானே படிப்பாரு என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.