நெல்லை சம்பவம் - மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

54பார்த்தது
நெல்லை: பாளையங்கோட்டையில் 8ஆம் வகுப்பு மாணவரை வெட்டிய சக மாணவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாணவன் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சிறுவர் சீர்திருத்த குழுமத்தில் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, வரும் 29ஆம் தேதி வரை 14 நாட்கள் அவரை சீர்திருத்த குழுமத்தில் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தகுதியான நபர்களைக் கொண்டு மாணவனுக்கு கவுன்சிலிங் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி