அனில் ரவிபுடி இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேசப்பட்டது. இப்படத்தில் நடிக்க அவர் சம்பளமாக ரூ.18 கோடி கேட்டதாகவும், இல்லையென்றால் நடிக்க மாட்டேன் எனவும் கூறி உள்ளார். இதைக்கேட்டு தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்த நிலையில், நடிகர் சிரஞ்சீவி நேரடியாக தலையிட்டு, நயன்தாராவுடன் பேசியுள்ளார். அதன்பிறகு அவர் ரூ.15 கோடி சம்பளத்திற்கு நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது